பகீர்... ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 7 சிறுவன்: வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

ஆற்றில் விழுந்த சிறுவனை காப்பாற்றியவர்
ஆற்றில் விழுந்த சிறுவனை காப்பாற்றியவர்
Updated on
2 min read

ஸ்ரீநகரில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 7 வயது சிறுவனை தனது உயிரையும் பொருட்படுத்தாமல் ஒருவர் நீச்சலடித்து காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சில நேரங்களில் துன்பத்தில் சிக்கியவர்களைக் காக்க உற்றார், உறவினர்களை விட முன்பின் தெரியாத யாரோ உதவிட முன் வருகிறார்கள். அப்படியொரு சம்பவம் தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகரில் உள்ள ஜீலம் ஆற்றில் 7 வயது சிறுவன் தவறி விழுந்தார். அவரை தண்ணீர் அடித்துச் சென்றது. அப்போது நீரில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள சிறுவன் முயற்சி செய்தும், வேகமாக செல்லும் தண்ணீர் அவரை அடித்துச் சென்றது.

ஆற்றில் அடித்துச் செல்லப்படும் சிறுவன்
ஆற்றில் அடித்துச் செல்லப்படும் சிறுவன்

அப்போது ஆற்றின் கரையில் நின்று கொண்டிருந்த ஒருவர், சிறுவன் ஆற்றில் அடித்துச் செல்வதைப் பார்த்தார். உடனடியாக சிறுவனைக் காப்பாற்ற ஆற்றில் குதித்தார். ஆனால், நீரின் வேகம் சிறுவனை வேகமாக அடித்துச் சென்றது. ஆனால், அந்த சிறுவனை விடாமல் நீச்சலடித்துச் சென்று அவர் காப்பாற்றி கரைக்குக் கொண்டு வந்தார்.

மூச்சுக் கொடுத்து காப்பாற்றியவர்.
மூச்சுக் கொடுத்து காப்பாற்றியவர்.

ஆனால், மூச்சுப்பேச்சு இல்லாமல் மயங்கிய நிலையில் சிறுவன் இருந்தார். இதனால் சிறுவனின் முதுகில் அமுக்கி ஆற்றில் குடித்த நீரை வெளியேற்றியதுடன், அவனுக்கு தனது மூச்சைக் கொடுத்து காப்பாற்றினார். அத்துடன் சிறுவனைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு அவர் ஓடினார்.

இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அத்துடன் சிறுவனைக் காப்பாற்றிய நிஜ ஹீரோ இவர் தான் என்று பலர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

ஆற்றில் இருந்து சிறுவனை மீட்டவரை அப்பகுதி மக்கள் பாராட்டினர். அவருடைய தைரியமும், வேகமான நடவடிக்கையும் ஒரு சிறுவனின் உயிரைக் காப்பாற்றியுள்ளது என்று அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கடந்த 26-ம் தேதி வெளியான இந்த வீடியோ தற்போது ஏராளமான பார்வையாளர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

நாளை குமரியில் மோடியின் தியான நிகழ்ச்சி நடக்குமா?!காங்கிரஸ் கட்சியால் பெரும் பரபரப்பு!

பெண்களே உஷார்... மளிகை கடையில் பொருள் வாங்குவது போல் வந்து நகையை பறித்துச் சென்ற இளைஞர்

பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி வருகை... கடலோர காவல்படை கப்பல்கள் தீவிர ரோந்துப்பணி

பகீர்... அரசு பள்ளிக்குள் மாணவிக்கு நடந்த அக்கிரமம்: கர்ப்பமாக்கிய தலைமை ஆசிரியர் கைது!

பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் எஸ்ஐடி விடிய விடிய சோதனை... கட்டில், தலையணைகள் பறிமுதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in