டாஸ்மாக் கடை வாசலில் பார் ஊழியர் வெட்டிக் கொலை!

டாஸ்மாக் கடை வாசலில் பார் ஊழியர் வெட்டிக் கொலை!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் டாஸ்மாக் வாசலில் பார் ஊழியர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தூர் பேருந்து நிலையத்தின் பின்புறம் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடை அருகே தனியாருக்கு சொந்தமான பார் ஒன்று உள்ளது. அந்த பாரில் இருக்கன்குடியை சேர்ந்த காந்திராஜன் (35) என்ற இளைஞர் பணியாற்றி வந்தார்.

நேற்று அவர் வழக்கம்போல் பணிக்கு வந்து மதுபானக்கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டினர். அதில் பலத்த காயம் அடைந்த காந்திராஜன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை உடனடியாக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி காந்திராஜன் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

போலீஸார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில் நத்தத்துபட்டியை சேர்ந்த மகாலிங்கபூபதி, பிரபு ஆகிய இரண்டு இளைஞர்கள் வெட்டிவிட்டு கோவில்பட்டி நோக்கி தப்பிச் சென்றது தெரியவந்தது.

அவர்களை காவல்துறையினர் புல்வாய்ப்பட்டி விலக்கு அருகே சோதனைச் சாவடியில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, இறந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நிவாரணம் பெற்றுத் தருவதாக உறுதி அளித்ததை அடுத்து கலைந்து சென்றனர். கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தை அடுத்து நத்தத்துபட்டி, இருக்கன்குடி ஆகிய கிராமங்களில் பாதுகாப்பு பணிக்காக போலீஸார் குவிக்கபட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in