திருவண்ணாமலை கோயிலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
திருவண்ணாமலை கோயிலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

வெள்ளத்துரை விவகாரம்... அரசியல் காழ்ப்புணர்ச்சி என அண்ணாமலை காட்டமான விமர்சனம்

அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெறும் நாளில் இடைநீக்கம் செய்யப்படுவது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று அதிகாலையில் அண்ணாமலையார் கோவிலில் நடைபெற்ற கோ பூஜையில் பங்கேற்றார். பின்னர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மன் ஆகியோரை தரிசித்தார். சாமி தரிசனம் மேற்கொண்ட அண்ணாமலை மற்றும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் ஆகியோருக்கு திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் மாலைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. பின்னர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

திருவண்ணாமலை கோயிலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
திருவண்ணாமலை கோயிலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

அப்போது பேசிய அவர், “திருவண்ணாமலை ஏடிஎஸ்பி வெள்ளைதுரை நேற்று ஓய்வு பெறும் நாளன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அந்த அறிவிப்பு மீண்டும் திரும்ப பெறப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஓய்வு பெரும் நாளன்று பணி இடை நீக்கம் செய்யப்படுவது என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியாகவே பார்க்கிறேன். அவரது விவகாரத்தில் எனக்கு ஏதும் தெரியாது. ஆனால் நீதிமன்றம் தலையிட்டுள்ளதால் நீதிமன்றம் முறையான தீர்ப்பு வழங்கும் என நம்புகிறேன்.

பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் மேற்கொண்டு உள்ள நிலையில் இதை அரசியலாக்க எதிர்க்கட்சிகள் முயல்கின்றனர். யார் வேண்டுமானாலும் அரசியல் அமைப்பு சட்டப்படி தாங்கள் விரும்பியதை செய்து கொள்ளலாம். இதை தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை” என்றார்.

அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு
அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு

மேலும், “இன்று டெல்லியில் நடைபெற உள்ள இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல கூட்டணி தலைவர்கள் பங்கேற்கவில்லை. இரண்டாம் கட்ட தலைவர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர். இன்றோடு இறுதிக்கட்ட தேர்தல் முடிவடைகிறது. இன்று வெளியாக உள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸ் உட்பட இந்தியா கூட்டணியினர் பங்கேற்க மாட்டார்கள் என அறிவித்துள்ளனர். 543 தொகுதிகளும் எந்த பக்கம் செல்லும் என்பது இந்தியா கூட்டணி தலைவர்களுக்கும் தெரியும். தேர்தல் முடியும் வரை தான் தாங்கள் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சியினர் கூறி வந்துள்ளனர். காங்கிரஸ் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளும் விதமாகவே விவாதத்தில் பங்கேற்பதில்லை என தெரிவித்துள்ளனர்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “தேர்தல் நடக்கும் வரை தான் அவர்களது நாடகம். அது இன்றுடன் முடிந்து விட்டது. மூன்றாவது முறையாக மோடி தான் பிரதமராக வருவார். அதனால் தான் மோடி அவர்களின் கன்னியாகுமரி வருகையை அரசியல் செய்கின்றனர். பிரதமர் அங்கே தியானம் மேற்கொண்டாலும் பொதுமக்கள் தங்கு தடையின்றி விவேகானந்தர் பாறைக்கு சென்று வருகிறார்கள்” என்றார்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in