இந்தூர் ரயில் பெட்டியில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் உடல்
இந்தூர் ரயில் பெட்டியில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் உடல்

இளம்பெண்ணைக் கொன்று உடலைத் துண்டு துண்டாக வெட்டி ரயில்களில் வீசிய முதியவர் கைது.. பதற வைக்கும் சம்பவம்!

Published on

மத்தியப்பிரதேசத்தில் பலாத்கார முயற்சி தோல்வியடைந்ததால் இளம்பெண்ணைக் கொன்று அவரது உடலைத் துண்டு துண்டுகளாக்கி இரண்டு ரயில்களில் வீசிய 60 வயது முதியவரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேசம் மாநிலம், இந்தூர் ரயிலில் ஜூன் 9-ம் தேதி நிர்வாண நிலையில் துண்டு துண்டாகப்பட்ட வெட்டப்பட்ட பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. உத்தராகண்ட் மாநிலம், ரிஷிகேஷ் ரயிலில் ஜூன் 10 -ம் தேதி 37 வயதான பெண்ணின் கைகள் மற்றும் கால்கள் ஒரு பையில் கண்டெடுக்கப்பட்டன.

இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்த ஆரம்பித்தனர். பெண்ணைக் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி ரயில்களில் போட்டவர் யார் என்பது குறித்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்த துவங்கினர்.

இந்தூர் ரயில் பெட்டியில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் உடல்
இந்தூர் ரயில் பெட்டியில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் உடல்

இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம், ரத்லம் மாவட்டத்தில் உள்ள பில்பாங்க் காவல் நிலையத்தில் பெண் காணவில்லை என்று ஜூன் 12 அன்று அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர். அதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்திய போது, இரண்டு ரயில் பெட்டிகளில் கண்டெடுக்கப்பட்ட உடல் உறுப்புகளுக்குச் சொந்தக்காரர் ரத்லம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய போது கணவருடன் சண்டை போட்டுக் கொண்டு ஜூன் 6-ம் அந்த பெண் உஜ்ஜைனி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மதுரா செல்வதற்காக வந்துள்ளார். அப்போது அவர் காணாமல் போனது தெரிய வந்தது. இதுகுறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காமிரா உள்ளிட்டவைகளை போலீஸார் சோதனை செய்தனர். அப்போது அந்த பெண்ணை கமலேஷ் படேல் என்ற 60 வயது முதியவர் துண்டு துண்டாக கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது தெரிய வந்தது.

அவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்திய போது கணவருடன் சண்டை போட்டுக் கொண்டு மதுரா செல்ல வந்த அந்த இளம்பெண்ணை சமாதானப்படுத்திய கமலேஷ் படேல், அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவருக்குத் தெரியாமல் அந்த பெண்ணுக்குத் தூக்க மாத்திரைகளைக் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அ

சட்டென மயக்கத்தில் இருந்து தெளிந்த அந்த பெண் சத்தம் போட்டுக் கத்தியுள்ளார். இதனால் அந்த பெண்ணின் கழுத்தை நெரித்து கமலேஷ் படேல் கொலை செய்துள்ளார். இதன் பின் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி இந்தூர் மற்றும் ரிஷிகேஷ் ரயில்களில் போட்டது தெரிய வந்தது.

இதையடுத்து கமலேஷ் படேல் உஜ்ஜைனியில் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி உள்ளிட்ட ஆதாரங்களை போலீஸார் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x
காமதேனு
kamadenu.hindutamil.in