ஆடைகளைக் களைந்து விட்டு நிர்வாணமாக ஓடிய பயணி... சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்
Updated on
1 min read

சென்னை விமான நிலையத்தில் ஆடைகளைக் களைந்து விட்டு நிர்வாணமாக ஓடிய பயணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மீனம்பாக்கத்தில் அண்ணா பன்னாட்டு விமான நிலையம் செயல்படுகிறது. இங்கிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வெளிநாட்டில் இருந்து வருகை தருவதும், இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கும் செல்வதும் வழக்கம். அத்துடன் வெளிநாடு செல்லும் பயணிகளை அவர்களது குடும்பத்தினர் வழியனுப்ப வருவதால் விமான நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

சென்னை விமான நிலையம்...
சென்னை விமான நிலையம்...

இந்நிலையில், சென்னையில் இருந்து அபுதாபிக்கு விமானம் ஒன்று செல்ல இருந்தது. இதில் பயணிக்க வந்த பயணிகளின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அமெரிக்க குடியுரிமை பெற்ற பெத்தனன் இளங்கோ(47) என்ற பயணி, தனது தந்தையுடன் அங்கிருந்தார். அபுதாபி வழியாக அவரது தந்தையும் அமெரிக்கா செல்வதற்காக வந்திருந்தார். அப்போது திடீரென தனது உடைகளைக் களைந்து விட்டு பெத்தனன் இளங்கோ விமான நிலையத்தில் நிர்வாணமாக ஓடினார். இதைக் கண்ட பயணிகளும், அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பெத்தனன் இளங்கோவை சூழ்ந்த அதிகாரிகள், அவரை ஆடையை அணியச்சொல்லி காட்டயப்படுத்தினர். அத்துடன் அவரை ஆடையை அணிய வைத்தனர். இதன்பிறகு அவரையும், அவரது தந்தையையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

மன அழுத்தம் காரணமாக தனது மகன் இப்படி நடந்து கொண்டதாக பெத்தனன் இளங்கோவின் தந்தை கூறினார். இந்த நிலையில், பயணியை விமானத்தில் அனுமதிக்க முடியாது என்று கூறிய அதிகாரிகள், அவர்கள் இருவரின் பயணத்தை ரத்து செய்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் மீண்டும் மதுரைக்கே அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in