லாரி மீது அரசுப்பேருந்து மோதி விபத்து... ஓட்டுநர் உட்பட 4 பேர் காயம்!

லாரி மீது அரசுப்பேருந்து மோதி விபத்து... ஓட்டுநர் உட்பட 4 பேர் காயம்!

சென்னை அருகே மதுராந்தகத்தில் லாரி மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் காயம் அடைந்தனர்.

அரசு விரைவு பேருந்து ஒன்று அதிகாலை சென்னையிலிருந்து திருச்சி நோக்கி 40 பயணிகளுடன் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து திடீரென முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.

மதுராந்தகம் அடுத்த மேட்டுப்பாளையம் அருகே பேருந்து வரும்போது, லாரி மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்து நேரிட்டது. இதில் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இரண்டு பயணிகள் காயம் அடைந்தனர்.

விபத்து
விபத்து

அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு உடனடியாக செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். நால்வருக்கும் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என தெரியவந்துள்ளது.

பேருந்தில் பயணம் செய்த பயணிகள் வேறு ஒரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in