காதலுக்கு பெற்றோர் சம்மதம்; கிராம மக்களால் கர்ப்பிணிக்கு நடந்த துயரம்!

காதலுக்கு பெற்றோர் சம்மதம்; கிராம மக்களால் கர்ப்பிணிக்கு நடந்த துயரம்!

வேறொரு சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை இளம் பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டதோடு, அந்த பெண்ணை கிராம மக்கள் அடித்து உதைத்து கர்ப்பத்தை கலைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.

திருப்பதி அடுத்துள்ள பழைய வீராபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீஹரி. இவர் லீலாவதி என்ற வேறு ஒரு சமூகத்துப் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் அவர்களது பெற்றோருக்கு தெரியவந்தது. ஆனால், பிள்ளைகளின் காதலுக்கு பெற்றோர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர் பெற்றார்கள். திருமணம் முடிந்து கணவர் வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த லீலாவதி கர்ப்பமானார். இதனுடைய தனது பெற்றோர் வீட்டிற்கு செல்ல லீலாவதி விரும்பினார். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கணவர் ஸ்ரீஹரி, மாமனார் வீட்டில் கொண்டு தனது மனைவியை அழைத்து வந்துள்ளார்.

இதனை அறிந்த கிராமத்தினர் லீலாவதி வீட்டை முற்றுகையிட்டதோடு வேறு ஒரு சமூகத்தைத் சேர்ந்தவரை எப்படி நீ திருமணம் செய்து கொள்ளலாம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், லீலாவதி குடும்பத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு இதனை இரண்டு நாட்களில் கட்ட வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இதையடுத்து, ஊர் பிரமுகர்களிடம் எங்களால் அவ்வளவுத் தொகை கட்ட முடியாது என்று பெற்றோர் கூறியிருக்கின்றனர். அப்போது ஏற்பட்ட தகராறில் லீலாவதி மற்றும் அவரது கணவரை கிராம மக்கள் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் லீலாவதியின் கர்ப்பம் கலைந்துள்ளது. மயங்கி விழுந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அவரது கணவர் கொண்டு சேர்த்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் குறித்து லீலாவதியின் கணவர் காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கிராம மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேறொரு சமூகத்தை காதலித்து திருமணம் செய்த இளம் பெண்ணின் கர்ப்பத்தை கிராம மக்களை கலைத்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in