உன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு என்னை திருமணம் செய்துகொள்: தோழியை கொன்ற வாலிபர்!

உன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு என்னை திருமணம் செய்துகொள்: தோழியை கொன்ற வாலிபர்!
கொலை

ஏற்கெனவே திருமணம் ஆன நிலையில் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய கள்ளக் காதலியை, காதலனே துள்ளத், துடிக்க வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம், காசர்கோடு அருகில் உள்ள போவிக்கானம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்(36). இவருக்கு ஏற்கெனவே திருமணம் முடிந்து குழந்தையும் இருக்கும்நிலையில் இவருக்கு ஊதுமாபாறை பகுதியைச் சேர்ந்த தேவிகா(34) என்பவரோடு பழக்கம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் இது முறைதவறிய காதலாகவும் மாறியது. தேவிகாவுக்கும் ஏற்கெனவே திருமணம் ஆகி இருகுழந்தைகள் உள்ளனர். தேவிகாவின் கணவர் வெளிநாட்டில் வேலைசெய்து வருகிறார்.

ஒருகட்டத்தில் இவர்களின் தவறானகாதல் விவகாரம் சதீஷ் வீட்டிற்குத் தெரியவந்தது. இதனால் பிரச்சினை ஏற்படவே சதீஷ், தேவிகாவோடு பழகுவதைக் குறைத்தார். இந்தநிலையில் தேவிகாவோ, சதீஷை தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டுத் தன்னுடன் வாழவருமாறு தொடர்ந்து அழைத்து வந்தார். ஒருகட்டத்தில் தேவிகாவின் தொந்தரவு தாங்கமுடியாமல் அவரைக் கொலை செய்ய முடிவு செய்தார் சதீஷ்.

இந்தத் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் சதீஷ், காஞ்சாங்கோடு பகுதியில் உள்ள ஒரு லாட்ஜிக்கு வருமாறு தேவிகாவை அழைத்தார். அங்கு வந்த தேவிகாவை முதலில் திருமணம் வேண்டாம் என சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் அதில் தோல்வி அடையவே, தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் தேவிகாவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். இதனைத் தொடர்ந்து காசர்கோடு போலீஸார் சதீஷைக் கைது செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in