பெண்ணின் உடலை அடக்கம் செய்வதில் மோதல்; அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்: தந்தை, மகன்கள் வெறிச்செயல்!

கொலை
கொலை

ராமநாதபுரம் மாவட்டத்தில் இளைஞரை அடுத்துக் கொலை செய்த தந்தை மற்றும் அவரது இருமகன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கல்கிணற்றுவலசைப் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி வள்ளி மயில். இந்தத் தம்பதிக்கு கோட்டைக் கண்ணன்(39), சித்திரைச் செல்வன் என இருமகன்கள் உள்ளனர். கடந்த இரு நாள்களுக்கு முன்பு வள்ளி மயில், அவரது உறவினரான நாகேஸ்வரி என்பவரின் வீட்டிற்குச் சென்றார். அப்போது திடீர் உடல்நலக்குறைவால் வள்ளி மயில் இறந்துபோனார். இதனைத் தொடர்ந்து அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு வள்ளிமயிலின் உடல் அடக்கம் செய்யப்பட்டது..

இந்நிலையில் வள்ளிமயிலின் உடலை அடக்கம் செய்தது தொடர்பாக கோவிந்தனின் மகன் கோட்டைக் கண்ணனுக்கும், அவரது உறவினரான ராஜாராமுக்கும் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த ராஜா ராம், அவரது மகன்கள் தமிழ்ச்செல்வன்(25), இருலேஸ்(21) ஆகியோர் சரமாரியாகத் தாக்கினர். இதில் கோடைக் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த உச்சிப்புளி போலீஸார் ராஜாராம், அவரது மகன்கள் தமிழ் செல்வன், இருலேஸ் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in