வங்கிக் கடனை அடைக்க கார் திருடிய வாலிபர்; பெட்ரோல் தீர்ந்து நடுவழியில் நின்ற கார்: அடுத்து நடந்தது தெரியுமா?

வங்கிக் கடனை அடைக்க கார் திருடிய வாலிபர்; பெட்ரோல் தீர்ந்து நடுவழியில் நின்ற கார்: அடுத்து நடந்தது தெரியுமா?

வங்கிக் கடனை அடைக்க கார் திருட்டில் ஈடுபட்ட கோயம்புத்தூரைச் சேர்ந்த வாலிபரை, திண்டுக்கல் போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், காக்காத்தோப்பு அருகில் ஒரு கார் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. அந்த வழியாக ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், காரை சோதனை செய்தனர். அப்போது அதில் போதையில் ஒரு வாலிபரும் இருந்தார். போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப் பின் முரணாகவே பேசினார். இதனால் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துப்போய் விசாரித்தனர். அதில் அந்த வாலிபர் கோவை மாவட்டம் பீளமேடு பகுதியைச் சேர்ந்த விஜய்(22) எனத் தெரியவந்தது.

விஜய்யிடம் போலீஸார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் கோவையில் பி.எஸ்.ஐ தகவல் தொடர்பியல் படிப்பை பாதியில் விட்டு,விட்டு லாரி ஓட்டுநராக இருந்தது தெரியவந்தது. விஜய் தீவிர மதுப்பழக்கத்திற்கும் ஆளாகியிருந்தார். இவர் வங்கியில் 8 லட்சம் ரூபாய் கடன் வாங்கி வீடு கட்டியிருந்தார். இதை அடைக்க முடியாமல் இதனால் திணறிவந்தார். இந்நிலையில், பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் கன்சல்டிங் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சென்றார். அங்கிருந்து மாருதி கார் ஒன்றைத் திருடி விற்று தன் கடனை அடைக்கலாம் என எடுத்து வந்திருக்கிறார்.

கொடைக்கானல் செல்லத் திட்டமிட்ட விஜய், பாதைமாறி வேடசந்தூர் வந்துள்ளார். அப்போது பெட்ரோல் இல்லாமல் கார் நடுவழியில் நின்றதால் அங்கேயே முடங்கிப்போனார். மது போதையிலும் இருந்ததால் காரிலேயே இருந்தார் விஜய். இந்நிலையில் தான் ரோந்து போலீஸாரிடம் அவர் சிக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து விஜயைக் கைது செய்த போலீஸார், அவர் திருடிவந்த காரையும் மீட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in