இளம்பெண்ணைக் கொன்று மாடியில் இருந்து தள்ளி விட்டுள்ளனர்: ஆட்டோ டிரைவர் குடும்பத்தினர் மீது பரபரப்பு புகார்

இளம்பெண்ணைக் கொன்று மாடியில் இருந்து தள்ளி விட்டுள்ளனர்: ஆட்டோ டிரைவர் குடும்பத்தினர் மீது பரபரப்பு புகார்

மனைவியை அடித்துக் கொன்று மாடியில் இருந்து தள்ளி விட்டுக் கொலை செய்ததாக ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் எழுந்துள்ளது.

வேலூர் மாவட்டம், திருமணியை அடுத்த உண்ணாமலை சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி முனியம்மா. இவர்களின் இரண்டாவது மகள் லட்சுமியை, உறவினரான ஆட்டோ ஓட்டுநர் ராஜேசுக்கு 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொடுத்தனர். ராஜேஸ்-லட்சுமி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், நேற்று இரவு லட்சுமி இறந்து விட்டதாக அவரது வீட்டிற்கு ராஜேஸ் தகவல் தெரிவித்துள்ளார். இதையறிந்து அதிர்ச்சியடைந்த லட்சுமியின் தந்தை மணி, தாய் முனியம்மா மற்றும் உறவினர்கள் லட்சுமியின் வீட்டிற்குச் சென்றனர். அனால், அதற்குள் லட்சுமியின் உடலை ராஜேஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் அப்புறப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து லட்சுமி குடும்பத்தினர் கூறுகையில், "திருமணமானதில் இருந்து லட்சுமியை அவரது கணவர் ராஜேஸ், அவரது தாய், தந்தை ஆகியோர் துன்புறுத்தி வந்தனர். லட்சுமியை அடித்து மாடியில் இருந்து தள்ளி விட்டுக் கொலை செய்துள்ளனர்" என்று கூறினர். இதனைத்தொடர்ந்து காவல் துறையிடம் அவர்கள் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in