பள்ளிக்குச் செல்லாமல் ஊர் சுற்றிய மகன்: கவலையில் தாய் எடுத்த அதிர்ச்சி முடிவு

பள்ளிக்குச் செல்லாமல் ஊர் சுற்றிய மகன்: கவலையில் தாய் எடுத்த அதிர்ச்சி முடிவு

மகன் பள்ளிக்குச் செல்லாத கவலையில் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சென்னை ராமபுரம் ஈஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சீதா(36) இவரது கணவர் ராமு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்துவிட்டார். இதனால் டெய்லரிங் வேலை செய்து தன் மகனை சீதா படிக்கவைத்து வந்தார். அவரது ஒரே மகன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். அதேநேரத்தில் தன் தாயின் பேச்சை சரிவரக் கேட்காமல் பள்ளிக்கும் செல்லாமல் தினமும் ஊர் சுற்றி வந்துள்ளாதாக கூறப்படுகிறது. இதனை சீதா பலமுறை கண்டித்துள்ளார்.

ஆனால், அதனைக் கேட்காமல் வழக்கம்போல் அவரது மகன் ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் சீதா கடுமையான மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் அதிருப்தியடைந்த சீதா தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ராமபுரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று சீதா உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in