வெடிவைத்த பாறைகளை அகற்றும் போது சிக்கிய தொழிலாளிகள்: பள்ளத்தில் விழுந்த ஒருவர் சாவு

பள்ளத்தில் விழுந்த தொழிலாளி பலி
பள்ளத்தில் விழுந்த தொழிலாளி பலிவெடிவைத்த பாறைகளை அகற்றும் போது சிக்கிய தொழிலாளிகள்: பள்ளத்தில் விழுந்த ஒருவர் சாவு

ராஜபாளையம் அருகே கல்குவாரியில் குவித்த பாறைகளை அகற்றும் பணியில் சிக்கி படுகாயமடைந்த தொழிலாளி பலியானார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் கந்த கிருஷ்ணகுமார். இவருக்கு சொக்கநாதன்புதூரில் கல்குவாரி உள்ளது. இங்கு நேற்று முன் தினம் பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டன. அப்பாறை குவியலை அகற்றும் பணி இன்று காலை நடந்தது.

இப்பணியில் தென்காசி மாவட்டம் வலசை சாமிராஜா, முத்துமாணிக்கம், இளந்திரையன்கொண்டான் பகுதியைச் சேர்ந்த மாரிகனி ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது சரிந்த பாறை குவியலில் இடுக்கில் மூன்று பேரும் சிக்கினர். சுமார் 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்து படுகாயமடைந்த மாரிகனி (49) சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவல் அடிப்படையில், சேத்தூர் போலீஸார் அங்கு விரைந்து சென்றனர். படுகாயமடைந்து மயங்கி கிடந்த சாமிராஜா, முத்துமாணிக்கம் ஆகியோரை மீட்டு சிவகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் தொடர்பாக சேத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in