பிள்ளைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியவில்லையே: வேதனையில் குழந்தை பிறந்த 40-வது நாளில் உயிரை மாய்த்த தாய்

பிள்ளைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியவில்லையே: வேதனையில் குழந்தை பிறந்த 40-வது நாளில் உயிரை மாய்த்த தாய்

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத வேதனையில் இளம்பெண் உயிரை மாய்த்துக் கொண்ட அதிர்ச்சி சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் ஆயிஷா. இவருக்கும் அமின்பாஷா என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு 40 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் ஆயிஷா வீட்டில் சமையல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து கணவர் கதறி அழுதார். தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஆயிஷாவின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து காவல்துறை நடத்திய முதல் கட்ட விசாரணையில், பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத வேதனையில் ஆயிஷா இருந்துள்ளதாகவும், இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் ஆயிஷாவின் தற்கொலைக்கான காரணம் குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத வேதனையில் இளம்பெண் தற்கொலையை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in