ஆந்திராவில் தனக்கு தினந்தோறும் உணவளித்த பெண் இறந்ததால், அவரது உடலைக் கொண்டு சென்ற டிராக்டர் பின் ஒரு குரங்கு தொடர்ந்து ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
ஆந்திராவில் உள்ள கொண்டபெட்டாவைச் சேர்ந்தவர் லட்சுமி தேவி. இவர் சாலையோரம் ஓட்டல் நடத்தி வந்தார். இவரது ஓட்டலுக்கு தினந்தோறும் வந்த ஒரு குரங்கிற்கு லட்சுமிதேவி உணவளித்து வந்தார். அந்த குரங்கும் அன்றாடம் லட்சுமி தேவியைத் தேடி வந்து உணவு சாப்பிட்டு விட்டுச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தது.
இந்த நிலையில் லட்சுமி தேவி நேற்று திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இதையறியாத குரங்கு வழக்கம் போல ஓட்டலுக்கு வந்துள்ளது. அப்போது லட்சுமிதேவி இறந்து அவரது உடலை டிராக்டரில் மயானத்திற்கு ஏற்றியுள்ளனர். இதைப் பார்த்த குரங்கு அந்த வாகனத்தைப் பின் தொடர்ந்து மயானம் வரை ஓடியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நன்றி மறவாத குரங்கின் செயல் நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.