வளைவில் திரும்பும் போது பள்ளத்தில் பாய்ந்த கார்: துடிதுடித்து பெண் பலி

விபத்து
விபத்து

செய்துங்கநல்லூர் அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம் அடைந்தனர். பெண் உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், வைத்தியலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிபாண்டி. இவரது மனைவி கல்யாணி(43). இந்நிலையில் இசக்கிபாண்டி இன்று அதிகாலையில் தன் மனைவி, மகள் ரம்யா, மகன் இம்மானுவேல் பிரபு ஆகியோருடன் காரில் நெல்லையை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

செய்துங்கநல்லூர் வளைவுப் பகுதியில் வந்தபோது கார் எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் பாய்ந்தது. இந்தக் கோர விபத்தில் கல்யாணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடி துடித்து உயிர் இழந்தார். காரை ஓட்டிவந்த அவரது கணவர் இசக்கி பாண்டி, மகன் இம்மானுவேல் பிரபு, மகள் ரம்யா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்துகுறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த செய்துங்க நல்லூர் போலீஸார் படுகாயம் அடைந்த மூவரையும் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். கல்யாணியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அதிகாலையில் நடந்த இந்த விபத்துகுறித்து செய்துங்கநல்லூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in