
தேசத்துரோகச் சட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவு ஜனநாயகத்தின் நவீன யுகத்தில் மகத்தான தருணமாகப் பார்க்கப்படுகிறது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. இந்த உத்தரவு இந்தியா முழுவதும் உள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் உள்ளிட்ட பலருக்குப் பெரும் நிம்மதியளிக்கிறது.
ஜூலை மாதம் இவ்வழக்கின் அடுத்த விசாரணை நடக்கவிருக்கிறது. மத்திய அரசும் இந்தச் சட்டத்தை மறுபரிசீலனை அல்லது மறுஆய்வு செய்வதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. அதுவரை இந்தப் பிரிவின்கீழ் யார் மீதும் வழக்கு தொடரப்படாது என நம்புவதாக உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. இந்நிலையில், இந்தச் சட்டம் தொடர வேண்டுமா, வேண்டாமா எனும் விவாதமும் எழுந்திருக்கிறது.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.