லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி
லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலிலாரி சக்கரத்தில் சிக்கி பலியான மனைவி; கணவன் கண்முன்னே நேர்ந்த சோகம்!

லாரி சக்கரத்தில் சிக்கி பலியான மனைவி: கணவன் கண்முன்னே நேர்ந்த சோகம்!

கட்டுப்பாட்டை இழந்த லாரி இரு சக்கர வாகனத்தில் வந்த தம்பதியினர் மீது மோதியதில், லாரி சக்கரத்தில் சிக்கி மனைவி பலியான நிலையில் படுகாயத்துடன் கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் கபிலன் இவரது மனைவி அமுதா. இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இந்தநிலையில் இன்று காலை உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தபோது, கண்டிகை பகுதியில் எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து தம்பதியர் வந்த வண்டியின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய அமுதா உடல் நசுங்கி கணவர் கண்முன் பரிதாபமாக இறந்தார். அவரது கணவர் கபிலன் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆரம்பாக்கம் போலீஸார் பலியான அமுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்துக் குறித்து வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவன் கண்முன்னே மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in