மது போதையில் தொடர்ந்து டார்ச்சர்… கொதிக்கும் ரசத்தை கணவன் மீது ஊற்றிய மனைவி: விழுப்புரத்தில் அதிர்ச்சி!

மது போதையில்  தொடர்ந்து டார்ச்சர்… கொதிக்கும் ரசத்தை கணவன் மீது ஊற்றிய மனைவி: விழுப்புரத்தில் அதிர்ச்சி!

மதுபோதையில் அன்றாடம் அடித்து துன்புறுத்தியதுடன் பாலியல் தொந்தரவு கொடுத்த கணவன் முகத்தில் கொதிக்கும் ரசத்தை மனைவி ஊற்றிய சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஜெயங்கொண்டானைச் சேர்ந்தவர் நடராஜன் (30). இவருடைய மனைவி குப்பம்மாள்(28). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். பேருந்துகளில் தின்பண்டங்களை விற்கும் வேலையில் நடராஜன் ஈடுபட்டு வந்தார். அத்துடன் குடிக்கு அடிமையான இவர், சம்பாதித்த பணத்தை முழுவதும் மதுவிற்கே செலவு செய்துள்ளார்.

இதனை அவரது மனைவி குப்பம்மாள் கண்டித்ததால் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் தனது மனைவியை நடராஜன் கொடுமைப்படுத்தத் துவங்கியுள்ளார். இதுகுறித்து செஞ்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இரண்டு முறை குப்பம்மாள் புகார் கூறியுள்ளார். இதையடுத்து நடராஜனை அழைத்து போலீஸார் சமரசம் பேசி அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு போதை தலைக்கேறிய நடராஜன், குப்பம்மாளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த குப்பம்மாள், கொதிக்கும் ரசத்தை நடராஜன் முகத்தில் ஊற்றினார். இதில் நடராஜன் முகம் வெந்து போனது. இதுகுறித்து அவர் செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் இரண்டு மணி நேரமாக போதையில் நடராஜன் அட்டகாசம் செய்துள்ளார். இதையடுத்து அவரை மேல்சிசிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in