கணவர் இறந்த செய்தியைக் கேட்டு மயங்கி விழுந்து மனைவி சாவு: செங்கோட்டையை உலுக்கிய சோகம்

கணவர் இறந்த செய்தி கேட்ட மனைவியும் மரணம்
கணவர் இறந்த செய்தி கேட்ட மனைவியும் மரணம்கணவர் இறந்த செய்தியைக் கேட்டு மயங்கி விழுந்து மனைவி சாவு: செங்கோட்டையை உலுக்கிய சோகம்

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் கணவர் இறந்த அதிர்ச்சியில் அவரது மனைவின் உயிரும் பிரிந்ததால் உறவினர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை காமராஜ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் துரை என்ற மாயாண்டி(58).  இவர் செங்கோட்டை பேருந்து நிலையத்தில் வாடகை கார் ஓட்டி வந்தார். இந்த நிலையில் இவருக்கு நேற்று நள்ளிரவில் உடல்நிலை குறைவு  ஏற்பட்டுள்ளது. அதையடுத்து  துரையை  அவரது குடும்பத்தினர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் செல்லும் வழியில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் இறந்ததாக கூறப்படுகிறது.  இந்த தகவலை வீட்டிலிருந்த  அவரது மனைவி கல்யாணிக்கு(50) தெரியப்படுத்தியுள்ளனர். அதைக் கேட்டதும் அதிர்ச்சியில்  அவர் மயங்கி விழுந்துள்ளார்.  உடனடியாக அவரை  அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றுள்ளனர்.  அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கணவன் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் இறந்த சம்பவம் செங்கோட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுக்கு சங்கர் என்ற மகன் உள்ளார். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in