நீதிபதி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர், ஆசிரியைகளுக்கு ஜாமீன்!

நீதிபதி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர், ஆசிரியைகளுக்கு ஜாமீன்!

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேர் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி, கடந்த மாதம் 13-ம் தேதி மரணமடைந்தார். மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு விசாரணைக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது. கைது செய்யப்பட்ட 5 பேரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து ஜாமீன் கோரிபள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் உள்பட 5 பேரை கைது செய்தது ஏன் என்பது குறித்து ஆகஸ்ட் 26-ம் தேதிக்குள் (இன்று) பதில் அளிக்க சிபிசிஐடிக்கு உத்தரவிட்டது. அதன்படி இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in