இன்று 14 மாவட்டங்கள், நாளை17 மாவட்டங்களிலும் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

இன்று 14 மாவட்டங்கள், நாளை17 மாவட்டங்களிலும் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் விளைவாக தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இன்று எந்தெந்த மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு,  நாளை மற்றும் நாளை மறுதினம் எந்தெந்த மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்பதையும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று 14 மாவட்டங்களிலும் நாளை 17 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இன்று தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 14  மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு உள்ளது.

நாளை  திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
நாளை மறுதினம்  (நவ.12)  செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, திருவள்ளூர், சென்னை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், சேலம், கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in