மெட்ரோ ரயில்
மெட்ரோ ரயில்ஐடிஐ படித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் மெட்ரோவில் தொழில் பழகுநர் பயிற்சி

ஐடிஐ படித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் மெட்ரோவில் தொழில் பழகுநர் பயிற்சி

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்பட்டுவரும் கொல்கத்தா  மெட்ரோ ரயில்வே கழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ படித்தவர்களுக்கு உதவித் தொகையுடன் ஒரு ஆண்டு தொழில் பழகுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதற்கான அறிவிப்பு கொல்கத்தா மெட்ரோ ரயில்வேயால்    வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து மார்ச் 6- ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பிட்டர் 81, எலெக்ட்ரிசியன் 2,  மெஷினிஸ்ட் 9, வெல்டர் 9 என மொத்தம் 125  காலியிடங்கள் உள்ளன. வயதுவரம்பு  15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். 

பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படுவர். பயிற்சியின்போது கொல்கத்தா மெட்ரோ ரயில்வே விதிமுறைப்படி உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100. கட்டணத்தை குறுக்கு கோடிட்ட ஐபிஓ-ஆக செலுத்த வேண்டும். 

எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர்கள், பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் www.mtp.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இனைத்து மார்ச் 6 ம் தேதிக்கு முன் தபாலில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in