தேர்வே எழுதாமல் மதிப்பெண் சான்றிதழ்; சர்ச்சையில் சிக்கிய பல்கலைக் கழகம்: லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி

தேர்வே எழுதாமல் மதிப்பெண் சான்றிதழ்; சர்ச்சையில் சிக்கிய பல்கலைக் கழகம்: லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் வெளிமாநில மாணவர்களுக்கு முறைகேடாக சான்றிதழ் வழங்கியது தொடர்பாக 8 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாயமான மாணவர்களின் விடைதாள்கள் பழைய பேப்பர் கடையில் இருந்து மீட்கப்பட்டது சர்ச்சையானது. இந்நிலையில் அடுத்த சர்ச்சைக்குள் மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் சிக்கி இருக்கிறது.

தொலைதூரக் கல்வி வாயிலாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த 2017-18-ம் ஆண்டில் படித்த மாணவர்களுக்கு முறைகேடாக சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. கேரள மாணவர்கள் நான்கு பேர் தேர்வில் தோல்வியடைந்த நிலையில், அவர்கள் தேர்ச்சி அடைந்ததாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வே எழுதாத சில மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கி முறைகேடு நடந்திருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவிக்கிறார்கள்.

பல்கலைக் கழகத்தில் நடந்த முறைகேடுகள் காரணமாக, 2 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என லஞ்ச ஒழிப்புத் துறையினரின் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கேரளாவில் கல்வி மையங்கள் நடத்தி வரும் அப்துல்ஹதீஸ், ஏ.கே.சுரேஷ், ஜெயபிரகாசன் உள்ளிட்ட நால்வர் மீது முறைகேடு செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேபோல மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் ஊழியர்கள் ராஜராஜன், சத்தியமூர்த்தி, கார்த்திகை செல்வன், ராஜபாண்டி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கல்வித்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in