அட்டைப்பெட்டியில் 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள்: திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கிய பயணி

அட்டைப்பெட்டியில் 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள்: திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கிய பயணி

திருச்சி விமான நிலையத்தில் 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க கரன்சி  பயணி ஒருவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.  அண்மைக்காலமாக திருச்சி விமான நிலையம் வழியாக வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் வெளிநாட்டு பணங்கள் உள்ளிட்டவை  கடத்தி வரப்படுவது அதிகரித்துள்ளது.  இதனால் தற்போது அங்கு பயணிகளிடம் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இன்று காலை திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணி எடுத்துவந்த  அட்டைப் பெட்டியில் 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூபாய் 8 லட்சத்து 5 ஆயிரத்து 500) மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதை பறிமுதல் செய்த  வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள்  அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in