பிப்ரவரி 1ல் மத்திய பட்ஜெட் தாக்கல்!

2 கட்டமாக நாடாளுமன்ற கூட்டத் தொடர்
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்hindu

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் அண்மையில் நிறைவடைந்தது. இந்நிலையில், 2022-23ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதியிலிருந்து தொடங்க இருக்கிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.

அதன்படி, ஜனவரி 31ம் தேதியிலிருந்து பிப்ரவரி 11 வரை முதல் கட்டமாகவும், மார்ச் 14ம் தேதியிலிருந்து ஏப்ரல் 8ம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

2022-23 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in