பிட் அடிப்பதாக ஆடைகளைக் களைந்து சோதனை: அவமானம் தாங்காமல் மாணவி தீக்குளிப்பு

பிட் அடிப்பதாக ஆடைகளைக் களைந்து சோதனை: அவமானம் தாங்காமல் மாணவி தீக்குளிப்பு

தேர்வில் பிட் அடிப்பதாக சந்தேகப்பட்டதால் ஆசிரியர் ஆடைகளைக் களைந்து சோதனையிட்டதால் அவமானம் தாங்க முடியாமல் 9-ம் வகுப்பு மாணவி தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள பள்ளியில் நேற்று தேர்வு நடைபெற்றது. அப்போது 9-ம் வகுப்பு தேர்வில் பிட் அடிப்பதாக ஆசிரியர் சந்தேகப்பட்டதார். இதையடுத்து ஒரு அறைக்கு அந்த மாணவியை அழைத்துச் சென்று மாணவியின் ஆடைகளைக் களைந்து ஆசிரியர் சோதனையிட்டார்.

இதனால் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த சிறிது நேரத்திலேயே அவமானம் தாங்க முடியாமல் அந்த மாணவி தன் உடம்பில் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக் கொண்டார். 90 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்," மாணவி சீருடையில் மறைத்து பிட்டை எடுத்துச் சென்றிருக்கலாம் என ஆசிரியர் சந்தேகித்துள்ளார். இதனால் மாணவியின் சீருடைகளைக் களைந்து நிர்வாணமாக்கியுள்ளார். மாணவி கொடுத்த வாக்குமூலத்தில்., ஆசிரியர் தன்னை அவமானப்படுத்தியதாகவும், கடுமையாக எதிர்த்த போதிலும், சீருடையில் பிட்டுகளை மறைக்கிறாய் என என்று சோதிக்க வகுப்பறையை ஒட்டியுள்ள அறையில் தனது ஆடைகளை கழற்றச் செய்ததாகவும் கூறியுள்ளார். மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in