ஆடல் பாடலுடன் சீர்வரிசை கொண்டு வந்த மணப்பெண்ணின் தோழி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு திருமண மண்டபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவில் மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. தற்போது சிறுவர்கள் அதிகமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம், உடுப்பியில் ஜோஸ்னா என்ற பெண்ணின் தோழிக்கு திருமணம் நடந்துள்ளது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜோஷ்னா, திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணப்பெண்ணை ஆடிப்பாடி கொண்டாட்டத்துடன் அழைத்து வந்திருக்கிறார். அப்போது, ஜோஸ்னா திடீரென திருமண மண்டபத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே ஜோஸ்னா இறந்து விட்டதாக கூறினர்.
மணப்பெண்ணின் தோழி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திருமணத்திற்கு வந்திருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.