கிரானைட் லாரியின் கீழ் சிக்கி வக்கீல், பெண் பலி: துக்க நிகழ்வுக்குச் சென்று திரும்பிய போது நடந்த சோகம்

கிரானைட் லாரியின் கீழ் சிக்கி வக்கீல், பெண் பலி: துக்க நிகழ்வுக்குச் சென்று திரும்பிய போது நடந்த சோகம்

கிரானைட் ஏற்றிச்சென்ற டிப்பர் லாரி மோதியதில்  வழக்கறிஞர்  ஒருவரும், அவரது மாமியாரும்  உயிரிழந்த சம்பவம் கரூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கரூர் மாவட்டம் கடவூர் பகுதியைச்  சேர்ந்தவர் கனகராஜ். வழக்கறிஞரான இவர் தான்தோன்றிமலை பகுதியில் வசித்து வருகிறார். நேற்று பாலவிடுதியில் நிகழ்ந்த ஒரு துக்க நிகழ்ச்சியில்  கலந்து கொள்வதற்காக கனகராஜ் மற்றும்  அவரது மாமியார் சுசீலா ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தனர். கலந்து அதில் கலந்து கொண்டு விட்டு நேற்று இரவு தான்தோன்றிமலைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

வெள்ளியணை அருகே வந்து கொண்டிருந்தபோது கிரானைட் கற்கள்  ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி ஒன்று இவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் லாரியின் அடியில் சிக்கிக் கொண்ட இருவரும் சக்கரங்கள் ஏறி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து வந்த வெள்ளியணை காவல் நிலைய போலீஸார் இருவரின் உடல்களையும் மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் தப்பி ஓடிய லாரி ஓட்டுநரைத்  தேடிவருகின்றனர். துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பி அவர்கள் விபத்தில் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in