கள்ளச்சந்தையில் மது வாங்கி குடித்த இருவர் பலி: தஞ்சையில் சோகம்

பலியான விவேக்
பலியான விவேக்கள்ளச்சந்தையில் மது வாங்கி குடித்த இருவர் பலி; தஞ்சையில் சோகம்!

தஞ்சாவூரில் டாஸ்மாக்கிலிருந்து கள்ளச்சந்தையில் மதுபானம் வாங்கி குடித்த இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பலியான கருப்பசாமி
பலியான கருப்பசாமி

தஞ்சாவூர் அருகே கீழவாசல்(கீழ் அலங்கம்) பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடைக்கு அருகே பார் செயல்பட்டு வருகிறது. இந்த பாரில் கள்ளச் சந்தையில் மது விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பாரில் கடை திறப்பதற்கு முன்பே காலை 11 மணி அளவில் குப்புசாமி என்ற 60 வயது முதியவர் மது வாங்கி குடித்துள்ளார். குடித்துவிட்டு வெளியே வரும் போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டு சாலையிலேயே சுருண்டு விழுந்து உள்ளார்.

இதனையடுத்து அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதேபோல் அடுத்த பத்து நிமிடத்தில் அதே கடையில் அதே வகை மதுவை வாங்கி குடித்த விவேக் என்ற 36 வயது இளைஞரும் சாலையில் சுருண்டு விழுந்து உள்ளார். உடனடியாக அவரையும் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அந்த இளைஞரும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த டாஸ்மாக் தாசில்தார் தங்க.பிரபாகரன் மற்றும் கடையின் சூப்பர்வைசர் முருகன் ஆகிய இருவரையும் பொதுமக்கள் சரமாரியாக தாக்கி கடைக்குள் பூட்டிவைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அவர்களை மீட்டு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in