சகவீரர்களை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர்: தூங்கும்போது நடந்த பயங்கரம்

சகவீரர்களை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர்: தூங்கும்போது நடந்த பயங்கரம்

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் மாவட்டத்தில் உள்ள மிர்தல் கண்டோன்மென்ட் என்ற இடத்தில் ராணுவ வீரர் ஒருவர் தனது சக வீரர்கள் இருவரை சுட்டுக் கொன்றுள்ளார்.

நான்கு வருடங்களாக ராணுவத்தில் பணிபுரியும் 22 வயதான லோகேஷ் என்ற ராணுவ வீரர், கௌரி சங்கர் மற்றும் சூர்ய காந்த் என்ற இரண்டு ராணுவ வீரர்களை திங்கள்கிழமை அதிகாலையில் சுட்டுக்கொன்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவ வீரர்களை துப்பாக்கியால் சுட்டப்பின்னர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய லோகேஷை தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு போலீஸார் கைது செய்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் என்னவென்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பேசிய ராணுவ அதிகாரி ஒருவர்போலீசில் அளித்த புகாரில், அவர்கள் தூங்கும்போது துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகக் கூறினார். அதன்பின்னர் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு பதன்கோட்டில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in