ஈரமான கையுடன் டிவி செட்டாப் பாக்ஸைத் துடைக்க முயன்றவருக்கு நேர்ந்த சோகம்!

மின்சார தாக்குதல்
மின்சார தாக்குதல் ஈர கையுடன், டிவி செட்டாப் பாக்ஸைத் துடைக்க முயன்றவருக்கு நேர்ந்த சோகம்!

கோவையில் ஈரம் படிந்த கையுடன் டிவி செட்டாப் பாக்ஸை துடைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடைப் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். இவர் அங்குள்ள காய்கறி மார்க்கெட்டில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு வேலை முடித்து வீட்டுக்கு வந்த அவர், வீட்டை சுத்தம் செய்தார்.

அப்போது ஈரம் படிந்த கையுடன் டிவி செட்டாப் பாக்ஸைத் துடைக்க முயன்றுள்ளார். மின்சாரம் தாக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட முனியப்பனை மீட்ட அக்கம்பக்கத்தினர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் முனியப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முனியப்பனுக்கு மகள் உள்பட 2 குழந்தைகள் உள்ளன. இவரது மனைவி அமுதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். முனியப்பன் தனியாக பிள்ளைகளை வளர்த்து வந்த நிலையில் அவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம், காரமடையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in