இன்றே கடைசி வாய்ப்பு... இந்திய ரயில்வேயில் 5,696 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

ரயில்வேயில் பணி
ரயில்வேயில் பணி

இந்திய ரயில்வேயில் 5,696 அசிஸ்டென்ட் லோகோ பைலட் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை அனுப்ப இன்றை கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வேயில் அசிஸ்டென்ட் லோகோ பைலட் (Assistant Loco Pilot (ALP)) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5,696 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இன்றைக்குள் (பிப்.19) விண்ணப்பிக்க வேண்டும்.

இதுகுறித்த அறிவிப்பில், அசிஸ்டென்ட் லோகோ பைலட் பணியிடங்களுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 5,696. இதற்கு கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ படித்திருக்க வேண்டும் அல்லது Diploma in Engineering or Bachelor’s Degree in Engineering படித்திருக்க வேண்டும்.

இதற்கான வயதுத் தகுதி 01.07.2024 அன்று 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. மாதச் சம்பளம் ரூ. 19,900 வழங்கப்படும்.

இந்தப் பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, கணினி வழி ஆப்டிடியூட் டெஸ்ட் ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 500. இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ. 250 ஆகும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in