
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் தடாலடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து தங்கத்தின் விலை கிடுகிடுவென அதிகரித்து வருவதால் நகைப்பிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 39 ரூபாய் உயர்ந்து 5,260 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 312 ரூபாய் உயர்ந்து 42,080 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலையும் இன்று ஒரு கிராமுக்கு 42 ரூபாய் உயர்ந்து 5,738 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் இன்று தடாலடியாக உயர்ந்துள்ளது. இதனால் இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் உயர்ந்து 74.90 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 500 ரூபாய் உயர்ந்து 74,900 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.