
ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது. பண்டிகை காலத்தில் விலை உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 7 ரூபாய் உயர்ந்து 5,076 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 56 ரூபாய் உயர்ந்து 40,608 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் இன்று உயர்வை சந்தித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் உயர்ந்து 74 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை 300 ரூபாய் உயர்ந்து 74,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.