ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த இரு நாட்களாக சற்று குறைந்திருந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 5,340 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 42,720 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 5,702 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த வாரம் பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர் தங்கத்தின் விலை இரண்டு நாட்களில் தடாலடியாக உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 5,505 ரூபாய்க்கும், ஒரு சவரன் 44,040 ரூபாய்க்கும் விற்பனையானது. அதன் பின்னர் படிப்படியாக குறைந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை உயர்ந்துள்ள அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று 20 காசுகள் உயர்ந்து 72.70 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை 200 ரூபாய் உயர்ந்து 72,700 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் மத்திய பட்ஜெட்டிற்கு பின்னர் ஒரு கிராம் 77.80 ரூபாய் என்ற புதிய உச்சத்தைத் தொட்டது.