திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: சென்னையில் சிக்கிய முக்கிய குற்றவாளி

திருவண்ணாமலையில் கொள்ளை நடந்த ஏடிஎம்
திருவண்ணாமலையில் கொள்ளை நடந்த ஏடிஎம்திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: சென்னையில் சிக்கிய முக்கிய குற்றவாளி

திருவண்ணாமலையில் ஏடிஎம் இயந்திரங்களை வெல்டிங் இயந்திரம் மூலம் வெட்டி 72 லட்சத்து 78 ஆயிரத்து 600 ரூபாயை கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளி நிஜாமுதீன் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ம் தேதி அதிகாலையில் திருவண்ணாமலை, போளூர், கலசபாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள நான்கு ஏடிஎம். மையங்களில் மர்ம நபர்கள் பணம் எடுக்கும் இயந்திரங்களை வெல்டிங் இயந்திரத்தின் மூலம் வெட்டி அதிலிருந்த 72 லட்சத்து 78 ஆயிரத்து 600 ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான நிஜாமுதீனை தனிப்படை போலீஸார், சென்னையில் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை இந்த கொள்ளை வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in