கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர கடும் போட்டி: 1,07,395 இடங்களுக்கு 2.99 லட்சம் பேர் விண்ணப்பம்

கல்லூரிகளில் சேர விண்ணப்பம்
கல்லூரிகளில் சேர விண்ணப்பம்கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர கடும் போட்டி: 1,07,395 இடங்களுக்கு 2.99 லட்சம் பேர் விண்ணப்பம்

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த 8-ம் தேதி முதல் தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில், மொத்தமுள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 395 இடங்களுக்கு, 1 லட்சத்து 15 ஆயிரத்து 752 மாணவர்கள், 1 லட்சத்து 28 ஆயிரத்து 274 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் 78 பேர் என மொத்தம் 2 லட்சத்து 99 ஆயிரத்து 558 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 104 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். மேலும், அரசு பள்ளி மாணவிகள் 54,638 பேர் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in