இடி மின்னலுடன் மழை : தமிழகம், புதுச்சேரிக்கு முக்கிய வானிலை அறிக்கை

தமிழகம், புதுச்சேரியில் மழை
தமிழகம், புதுச்சேரியில் மழைஇடி மின்னலுடன் மழை : தமிழகம், புதுச்சேரிக்கு முக்கிய வானிலை அறிக்கை

தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். மேலும், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், " சென்னை, வட தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும், நாளையும் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி,நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in