நோயாளி போல் நடித்து டாக்டர் குடும்பத்தினர் மீது தாக்குதல்: 8 பேருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை!

நோயாளி போல் நடித்து டாக்டர் குடும்பத்தினர் மீது தாக்குதல்: 8 பேருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை!

டாக்டர் உள்ளிட்ட குடும்பத்தினரை தாக்கிய 8 பேருக்கு மூன்றாண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

சென்னை கே.கே.நகரை சேர்ந்த டாக்டர் இளங்கோவன். இவரின் வீட்டுடன் இணைந்த அவரது மருத்துவமனைக்குள் நோயாளி போல நடித்து கடந்த 2014 ஜனவரி அதிகாலை நேரத்தில் நுழைந்த கும்பல் இளங்கோவன் உள்பட அவரது குடும்பத்தினரை கடுமையாக தாக்கியது. இச்சம்பவம் தொடர்பாக முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி உரிமையாளர் ராதாகிருஷ்ணன் மகன் கோகுல், அலெக்ஸ், அறிவழகன் உள்பட 8 பேரை கே.கே. நகர் போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையில், மருத்துவமனை டீன் ஆக இளங்கோவன் பணியாற்றிபோது, கோகுலுடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தாக்கியது தெரியவந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தங்க மாரியப்பன் கோகுல் உள்ளிட்ட 8 பேர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறி, அனைவருக்கும் தலா 3 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை, ரூ. 48 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதில் ரூ.30 ஆயிரத்தை டாக்டர் இளங்கோவனுக்கு வழங்க உத்தரவிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in