தொடர்ந்து ஆடுகளை திருடிவந்த 4 பேருக்கு குண்டாஸ்: தூத்துக்குடி போலீஸ் நடவடிக்கை

 கைது
கைது தொடர்ந்து ஆடுகளை திருடிவந்த 4 பேருக்கு குண்டாஸ்: தூத்துக்குடி போலீஸ் நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி மற்றும் ஆடு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட நான்கு பேர்  குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம்,  கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கயத்தாறு தெற்கு சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த மணி மகன் ரஞ்சித்குமார் (46) என்பவரிடம்  கடந்த 19.02.2023 அன்று மதுபோதையில் ஒரு கும்பல்  தகராறு செய்தது. அந்த புகாரில் கயத்தாறு புதுகாலனியை சேர்ந்த சுப்பிரமணி மகன் கணேசன் (32), தூத்துக்குடி ராஜபாண்டி நகரை சேர்ந்தவர்களான சுப்பிரமணி மகன் இசக்கிமுத்து (35) மற்றும் ராமசந்திரன் மகன் முருகன் (30) மற்றும் சிலரை கயத்தாறு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

கடந்த 30.12.2022 அன்று சேரன்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்குளம்  ராமனுஜம்புதூர் சாலையில் உள்ள ஒரு தோட்டத்திற்குள் புகுந்த ஒரு கும்பல்  அங்கு இருந்த காவலாளிகளை அரிவாளால் தாக்கிவிட்டு அங்கு இருந்த 37 ஆடுகளை  சரக்கு வாகனத்தில் திருடிச்சென்றது. அந்த  வழக்கில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி மறுகால்குறிச்சியை சேர்ந்த ஆறுமுகம் மகன் முத்து (எ) முத்துபாண்டி (28) மற்றும் சிலரை சேரன்குளம் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்குகளை சம்பந்தப்பட்டவர்கள் தொடர் குற்றங்களை செய்து வருவதால் இவர்களை குண்டர் தடை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்கள் அறிக்கை அளித்து இருந்தனர். அவர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்,   தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். 

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் சரவணன், குற்றவாளிகள்  செந்தில்ராஜ் , கணேசன், இசக்கிமுத்து, முருகன்,  முத்து (எ) முத்துபாண்டி  ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில்  அவர்கள் நால்வரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு நேற்று  பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in