பாகிஸ்தான் நீதித்துறைக்கும், இந்திய நீதித்துறைக்கும் இது தான் வித்தியாசம்!: மதிப்பீடு செய்யும் மெகபூபா

பாகிஸ்தான் நீதித்துறைக்கும், இந்திய நீதித்துறைக்கும் இது தான் வித்தியாசம்!: மதிப்பீடு செய்யும் மெகபூபா

"பாகிஸ்தானில் கும்பல் தாக்குதல் நடத்துபவர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்படுகிறது. அதே சம்பவம் இந்தியாவில் நடந்தால் அப்படி தாக்குதல் நடத்துபவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது" என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகரில் மெகபூபா முப்தி இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “ பாகிஸ்தானில் ஒருவர், கும்பல் தாக்குதலால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதல் தொடர்பாக 6 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. 12 பேருக்கு ஆயுள் தண்டனையை அந்நாட்டு நீதித்துறை விதித்துள்ளது.

ஆனால், 2015-ம் ஆண்டுக்கு பின் இந்தியாவில் பல 'அக்லக்'குகள் கும்பல் தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியாவில் கும்பல் தாக்குதல் நடத்துபவர்கள் மாலை அணிவித்து கொண்டாடப்படுகின்றனரே தவிர தண்டிக்கப்படுவதில்லை. இது தான் பாகிஸ்தான் நீதித்துறைக்கும், இந்திய நீதித்துறைக்கும் உள்ள வித்தியாசம்” என்றார்.

கடந்த 2015-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் தாத்ரியில் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக சந்தேகத்தின் பெயரில் முகமது அக்லக் என்பவர் கும்பலால் அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதைச் சுட்டிக்காட்டும் வகையிலேயே இன்றைய பேட்டியில் ‘அக்லக்குகள்’ என்று மெகபூபா குறிப்பிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in