'ரோஹித் வெமுலா போல என்னைக் குறிவைத்துள்ளனர்': மீண்டும் கைதான ஜிக்னேஷ் மேவானி திடுக்!

'ரோஹித் வெமுலா போல என்னைக் குறிவைத்துள்ளனர்':  மீண்டும் கைதான ஜிக்னேஷ் மேவானி திடுக்!

பிரதமர் மோடியை விமர்சித்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்த குஜராத் சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானியை அசாம் போலீஸார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

குஜராத் மாநில சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் ஜிக்னேஷ் மேவானி. பிரதமர் நரேந்திர மோடி குறித்து ட்விட்டரில் அவதூறாக கருத்து பதிவிட்டதாக அசாம் மாநில பாஜக தலைவர் அரூப் குமார் டே காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து ஏப்ரல் 20-ம் தேதி நள்ளிரவில் ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்பட்டார். இரு பிரிவினரிடையே பகைமையை ஊக்குவித்தல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் உள்நோக்கத்துடம் அவமதித்தல், சதிச் செயல் என பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன

இந்நிலையில் அசாம் நீதிமன்றம் ஜிக்னேஷ் மேவானிக்கு ஜாமீன் வழங்கியது. இதனால் ஜாமீனில் வெளி வந்த மேவானியை, மீண்டும் அசாம் போலீஸார் கைது செய்துள்ளனர். அதிகாரிகளைத் தாக்கியதாக பதிவான வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜிக்னேஷ் மேவானி கூறுகையில், " பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சதி காரணமாகவே நான் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளேன். திட்டமிட்டு இதுபோன்ற நடவடிக்கையில் அவர்கள் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். ரோஹித் வெமுலா மற்றும் சந்திரசேகர் ஆசாத்திற்கு இதேபோன்று தான் நடந்தது. தற்போது என்னை குறிவைத்துள்ளனர்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in