அரசுப் பள்ளியில் மீண்டும், மீண்டும் இரும்பு குடிநீர் குழாய் திருட்டு

அரசு பள்ளியில் அடிக்கடி திருடு போகும் குடிநீர் குழாய்
அரசு பள்ளியில் அடிக்கடி திருடு போகும் குடிநீர் குழாய்அரசுப் பள்ளியில் மீண்டும், மீண்டும் இரும்பு குடிநீர் குழாய் திருட்டு

குமரி மாவட்டத்தில் ஏற்கெனவே இரும்பு தண்ணீர் குழாய் பைப் திருடுபோன அதே அரசுப்பள்ளியில் மீண்டும் தண்ணீர் குழாய் திருடப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், செருப்பாலூர் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த அக்டோபர் மாதம் மாணவர்கள் கைகழுவும் இடத்தில் உள்ள ஆறு இரும்பு பைப்புகள் திருடப்பட்டு இருந்தன. இந்நிலையில் இதேபள்ளியில் இன்று காலையில் மாணவர்களும், ஆசிரியர்களும் பள்ளிக்குச் சென்றுபார்த்தபோது பல இரும்பு பைப்புகள் திருடு போய் இருந்தது.

இப்போது மாணவிகள் கை கழுவும் இடத்தில் பள்ளிக்கு உபயதாரர்கள் மூலம் பொருத்தப்பட்ட ஆறு இரும்பு குழாய்கள், இதேபோல் மாணவ, மாணவிகளின் கழிவறையில் உள்ள பைப் இணைப்புகளும் திருடப்பட்டு இருந்தது. ஒரேபள்ளியில் மீண்டும், மீண்டும் இரும்பு பைப்களை மட்டுமே மர்மநபர் குறிவைத்துத் திருடி வருவதன் பின்னணி தெரியாமல் பள்ளி ஆசிரியர்களும் குழம்பினர்.

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து பள்ளித் தலைமையாசிரியர் சித்தார்த்தன், குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மது குடிப்பதற்காக இரும்பு பொருள்களைத் திருடி விற்பவர்கள் இந்த சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in