உடன் பிறந்த அண்ணனை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற தங்கை: சொத்துக்காக நடந்த விபரீதம்

கொலை
கொலை

சொத்துப் பிரச்சினையில் சொந்த அண்ணனை குத்திக் கொலை செய்து, அவரை பெட்ரோல் விட்டு எரிக்கதிட்டம் தீட்டிய தங்கை கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், விருவீடுசென்மார்பட்டியைச் சேர்ந்தவர் மணி. விவசாயியான இவருக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உண்டு. இவரது மகன் வனராஜா(34)வுக்கு மட்டும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் குடிநீர் வினியோகராக உள்ளார். இவரது தங்கை நித்யா அதேபகுதியில் பெட்டிக்கடையும், நித்யாவின் கணவர் ராஜேஷ் உசிலம்பட்டியில் கறிக்கடையும் வைத்துள்ளார்.

தன் தந்தை மணிக்கு சொந்தமான 34 சென்ட் நிலத்தை வனராஜா தனது பொறுப்பில் வைத்துள்ளார். ஆனால் அந்த நிலத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என நித்யா தொடர்ந்து வனராஜாவிடம் தகராறு செய்துவந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் குடிபோதையில் அடிக்கடி வனராஜா தன் சகோதரி நித்யாவிடம் தகராறு செய்துள்ளார். இதேபோல் அண்மையில் குடிபோதையில் தன் தங்கை நித்யா வீட்டில் போய் சப்தம் போட்ட வனராஜா, அங்கிருந்த பாத்திரங்களை சேதப்படுத்தியதோடு, நித்யாவையும் அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். இதுகுறித்து நித்யா, தன் கணவரிடம் சொன்னார். இதைக்கேட்ட ராஜேஸ் நேற்று வனராஜா வீட்டில் தூங்கிக் கொண்டு இருக்கும்போது அரிவாளால் வெட்டினார்.

வெட்டுக் காயங்களுடன் வனராஜா தப்பிச் செல்ல முயன்றபோது, அவரது தங்கை நித்யா அவர் மேல் பெட்ரோல் ஊற்றி தீவைத்தார். இதனால் தீக்காயங்களுடன் வனராஜா வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து விருவீடு போலீஸார் வழக்குப்பதிந்து ராஜேஷ் மற்றும் நித்யாவைக் கைது செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in