தனியாக இருந்த தாய் கொலை; கழுத்தில் கிடந்த நகைகள் மாயம்: மகன், மகள் அதிர்ச்சி

 கொலை
கொலை தனியாக இருந்த தாய் கொலை; கழுத்தில் கிடந்த நகைகள் மாயம்: மகன், மகள் அதிர்ச்சி

திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளத்தில் வீட்டில் தனியாக இருந்த வயோதிக பெண்ணை 11 பவுன் நகைகளுக்காக கொலை செய்து, நகைகளைத் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வடக்கன்குளம் அருகில் உள்ள பக்திநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் உஷாதேவி(62). இவரது மகன், மகள் வெளியூரில் வேலை செய்வதால் வீட்டில் இவர் மட்டும் தனியாக வசித்து வந்தார். வழக்கமாக அடிக்கடி வீட்டை விட்டு வெளியே வரும் உஷாதேவி நேற்று வெளியே வரவே இல்லை. இதனால் உஷாதேவியின் உறவினர்கள் நேற்று இரவு வீட்டுக்குப் போய் பார்த்தனர். அப்போது அங்கே உஷாதேவி இறந்து கிடந்தார்.

இதுகுறித்து உறவினர்கள் வெளியூரில் இருக்கும் உஷாதேவியின் மகன், மகளுக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது, உஷாதேவியின் கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்க செயின், 2 பவுன் வளையல் ஆகியவையும் மாயம் ஆகி இருந்தது. இதேபோல் உஷா தேவியின் கழுத்தை நெரித்ததற்கான தடயமும் இருந்தது. இதனால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, 11 பவுன் நகைகளைத் திருடிச் சென்று இருக்கலாம் என ராதாபுரம் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

உஷாதேவி தனியாக இருப்பதை நோட்டமிட்டு தெரிந்தவர்களே இந்தச் செயலை அரங்கேற்றி இருக்கக் கூடும் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in