ரயில் நிலையத்தில் சிறுமியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த வாலிபர்: தன் கழுத்தையும் அறுத்துக் கொண்டதால் பரபரப்பு

ரயில் நிலையத்தில் சிறுமியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த வாலிபர்: தன் கழுத்தையும் அறுத்துக் கொண்டதால்  பரபரப்பு

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஒரு தலைக்காதலால் ரயில் நிலையத்தில் சிறுமியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த வாலிபர், தன்னைத் தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் அசம்கர் ரயில் நிலையத்திற்கு மும்பையில் இருந்து ரயில் நேற்று மாலை வந்துள்ளது. அதில் இருந்து 18 வயது சிறுமி இறங்கியுள்ளார். அவரைப் பின் தொடர்ந்து வந்த 22 வயது வாலிபர் சிறுமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த கத்தி போன்ற கூரிய ஆயுதத்தால் சிறுமியின் கழுத்தை அறுத்துக்கொலை செய்தார். இந்த சம்பவத்தால் ரயில் நிலையத்தில் நின்ற பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

சிறுமியைக் கொன்ற ஆயுதத்தால் பின்னர் தன் கழுத்தையும் அந்த வாலிபர் அறுத்துள்ளார். அங்கிருந்த பயணிகள் உடனடியாக ரயில்வே போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீஸார் சிறுமியின் உடலை மீட்டதுடன், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வாலிபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்ட சிறுமி ஜஹானாகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவரை ஒருதலையாக காதலித்த வாலிபர் பிலாரியகஞ்ச் பகுதியைச் சேர்ந்த தனஞ்சய் பாஸ்வான்(22) என்பது தெரிய வந்துள்ளது. காதலிக்க மறுத்தால் அந்த சிறுமியை அவர் கழுத்தை அறுத்துக் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அசம்கர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற இக்கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in