தமிழ்நாட்டில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் மாணவர் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு

தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு
தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடுதமிழ்நாட்டில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் மாணவர் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் மாணவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

கடந்த மே 8-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள 164 அரசு கலைக்கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 07 ஆயிரத்து 395 இடங்களுக்கு 2.99 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில், அரசு கலைக்கல்லூர்களில் மாணவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. இந்த தரவரிசைப்பட்டியல் தமிழ்நாட்டில் உள்ள அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மே 30-ம் தேதி முதல் ஜூன் 9-ம் தேதி வரை முதல் கட்ட பொது கலந்தாய்வும், அடுத்த மாதம் 12-ம் தேதி முதல் 20ம் தேதி வரை 2-ம் கட்ட பொது கலந்தாய்வும் நடத்தப்பட உள்ளது. கலந்தாய்வு நிறைவு பெற்றதும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் அடுத்த மாதம் 22-ம் தேதி தொடங்கும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in