
ஒருபக்கம் கேரளத்து செண்டை மேளம். மறுபக்கம் அரை மணி நேரமாக அயராது வெடித்த பட்டாசு சத்தம். இதற்கு நடுவே 16 சக்கரம் பொருத்திய 2 கண்டெய்னர் லாரிகளில் பெண்ணுக்கு சீர் வரிசை சாமான்கள் மெதுவாக ஊர்ந்து வந்தது. இத்தனை தடபுடலாக யாருடைய திருமணம் என விசாரித்தால், திருமணம் இல்லை பூப்புனித நீராட்டு விழா என்றார்கள்.
மதுரையின் புறநகர் பகுதியான ஊமச்சிகுளம் ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் தான் மகள் ஜெனித்தாவின் பூப்புனித நீராட்டு விழாவை கடந்த 12-ம் தேதி இப்படி ஊர்மெச்ச நடத்தினார். காண்ட்ராக்டரான சக்திவேல் இதற்கு முன்பு யாரும் இப்படியொரு பூப்புனித நீராட்டு விழாவை நடத்தியதில்லை என்று பார் புகழவேண்டும் என்பதற்காக இத்தனை பகட்டாக மகளின் பூப்புனித நீராட்டை நடத்தினாராம்.
மகளுக்கு விழா எடுத்த மகிழ்வில் இருந்தவரை அலைபேசியில் பிடித்துப் பேசினோம். ”நானும் என் மனைவி ரேவதியும் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க. ரேவதி வீட்டுல எங்க கல்யாணத்தை ஏத்துக்கிட்டாங்க. எங்க வீட்டுல எத்துக்கல. அப்பா மட்டும் அப்பப்போ பேசுவாரு. இவங்க முன்னாடி நல்லா வாழ்ந்து காட்டணும்கிற லட்சியத்தோட உழைச்சுச் சம்பாதிக்க ஆரம்பிச்சேன். நாலு மாடி வெச்சு வீடு கட்டுனேன். எங்க ஊர்லயே வீட்டுக்கு ஏ.சி. போட்ட முதல் ஆளும் நான் தான். இப்படி எல்லாத்தையும் ஸ்பெஷலா செஞ்சுட்டு வந்த நான், என் மகளோட சடங்கையும் (பூப்புனித நீராட்டு விழா) பிரம்மாண்டமா நடத்தணும்னு பிளான் போட்டேன்” என்று நிறுத்தினார் சக்திவேல்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.