என் மனைவி முகத்தில் வழியும் ரத்தத்திற்கு நான் தான் காரணம்: தாக்குதல் நடத்தி வீடியோ வெளியிட்ட சைக்கோ கணவர்

என் மனைவி முகத்தில் வழியும் ரத்தத்திற்கு நான் தான் காரணம்: தாக்குதல் நடத்தி  வீடியோ வெளியிட்ட சைக்கோ கணவர்

வேலைக்குச் சென்ற மனைவியை கொடூரமாக தாக்கி அதை வீடியோவாக வெளியிட்ட சைக்கோ கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த மலையின்கீழ் பகுதியைச் சேர்ந்தவர் திலீப். இவரது மனைவி அப்பகுதியில் உள்ள ஒரு சூப்பர்மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 16-ந்தேதி வேலை முடிந்து வீட்டிற்கு வந்த மனைவியை திலீப் கொடூரமாக தாக்கினார். அதை அவரே செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோவில்," மனைவியை நான்தான் தாக்கினேன், அவரது முகத்தில் வழியும் ரத்தத்திற்கு நான் தான் காரணம். அவள் இனி வேலைக்கு செல்லமாட்டாள்" என்று கூறி மீண்டும் மீண்டும் அவரை சரமாரியாக அடித்து உதைக்கிறார்.

இந்த காட்சிகள் சமூகவலைதளத்தில் பரவியது. இதனை பார்த்த பலரும் காட்டுமிராண்டித்தனமாக நடந்த திலீப்பை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனாலும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லையென்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் திலீப்பின் மனைவி போலீஸில் நேற்று புகார் கொடுத்தார். அதில் குடிபோதையில் தனது கணவர் தினமும் அடித்து சித்ரவதை செய்வதாகவும், குடும்பச் செலவுக்குப் பணம் தராமல் துன்புறுத்துவதாகவும் கூறியிருந்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி திலீப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in